நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் வெங்காயம். சமையலின் ருசியை கூடுதலாக்க இந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறோம் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வெங்காயமானது மருத்துவ குணம் உடையது என்பதை நாம் உணர வேண்டும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.அதில் இருக்கும் Vitamin C, Antioxidant நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள் :
- பெரிய வெங்காயம் – 4பூண்டுப் பற்கள் – 4 nos
- பச்சைமிளகாய் – 2 nos
- கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப்
- வெண்ணெய் – 1 tsp
- மிளகுத்தூள் – 1 tsp
- நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – 1tsp
- சோள மாவு – 1 tsp
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
- வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
- ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.
ஆரோக்கியம் தரும் வெங்காய சூப் தயார்