இந்த விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விரும்பும் சத்தான கொழுக்கட்டை செய்ய கோதுமை ரவை வைத்து சுவையான கொழுக்கட்டை செய்யலாம்.அதன் செயல்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
- கோதுமை ரவை – 1 cup
- கடலை பருப்பு – கால் cup
- காய்ந்த மிளகாய் – 2 nos
- தேங்காய் துருவல் – கால் cup
- தண்ணீர் – 2 cup
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
- எண்ணெய் – தேவைக்கு
- கடுகு – 1 tsp
- கடலைபருப்பு – 1 tsp
- உளுந்தம் பருப்பு – 1 tsp
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை :
- வெறும் வாணலில் கோதுமை ரவையை போட்டு பொன்னிறமா வரும் வரை வறுக்கவும்.
- கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அதன்பின் வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை மற்றும் அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்.